புதுச்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா

சேந்தமங்கலம், டிச.5: புதுச்சத்திரம் வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் முன்னிலை வகித்தார். விழாவில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கல்வி ஒருங்கிணைப்பாளர் செல்வராணி, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: