விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

சேந்தமங்கலம், டிச. 5: புதுச்சத்திரம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உலக மண் நாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி இயக்குனர் பேபிகலா தலைமை தாங்கினார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக தேக்கு, நாவல், வேம்பு, நெல்லி, பெருநெல்லி, ஆகிய மரக்கன்றுகள், மானியத்துடன் தார்ப்பாய் மற்றும்  மண்பரிசோதனை அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் துரை ராமசாமி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதம், வேளாண்மை துணை இயக்குனர் ஜெகதீசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பால் ஜாஸ்மின், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: