திருச்செங்கோடு, டிச.5: மல்லசமுத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலர் ராஜவேலு தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் முரளீதரன் வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நாடகம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றின் மூலம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலும் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போல மரப்பரை, செக்காரப்பட்டி, வையப்பமலை ஆகிய பகுதிகளிலும், இல்லம்தேடி கல்வித்திட்டம் பிரசாரம் நடந்தது.