மது கடத்தியவர் கைது

பள்ளிபாளையம், டிச.5: மேச்சேரி வெள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் கடந்த 2 வருடங்களாக பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை, பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு அட்டை பெட்டியை தூக்கிச்சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட தனிபிரிவு காவலர் கார்த்திகேயன் சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். அப்போது அட்டை பெட்டியில் 54 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாட்டில்கள் அனைத்திலும் மூடி திறக்கப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் பறிமுதல் செய்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். பாட்டில்களை கடத்திச்சென்ற மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: