விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் 15ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு, டிச.5: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியின் 15 மற்றும் 16ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, நிர்வாகிகள் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், டாக்டர் கிருபாநிதி, டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குனர் குப்புசாமி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், அட்மிஷன் இயக்குனர் வரதராஜ் முன்னிலை வகித்தனர். முதல்வர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஐடிசி அகாடமியின் தலைவர் அன்புத்தம்பி கலந்து கொண்டு, 806 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் இடம் பிடித்த 55 மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

Related Stories: