தேன்கனிக்கோட்டை, டிச.5: தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகளில் நோட்டீஸ் வழங்கி கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஸ்குமார் தலைமையில், மாவட்ட பூச்சியியல் அலுவலர் முத்து மாரியப்பன், உதவி மலேரியா அலுவலர் செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரம், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் நடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் வணிக வளாகங்கள், வங்கிகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.