புகையிலை விற்ற 13 பேர் கைது

கிருஷ்ணகிரி, டி1ச.5: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அதன்படி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அவதானப்பட்டி நாகராஜ்(37), சாமல்பட்டி அமான்கான்(42), சூலாமலை முருகேசன்(36), பேடரப்பள்ளி சிவக்குமார்(50), ஓசூர் பேடரப்பள்ளி வேடியப்பன்(37), சூதாளம் முருகேஷ்(45), ஓசூர் இந்திரா நகர் வெங்கடசாமி(80), ஓசூர் என்.ஜி.ஓ காலனி ஆனந்த் ஹேம்நாத்(40), பேரிகை ராஜா தெரு ராஜேஷ்(27), ஜிட்போனப்பள்ளி ராமச்சந்திரா(36), சீபம் திருமலேசன்(27), ஊத்தங்கரை நாராயண் நகர் இம்பராஹிம்(70), சாமல்பட்டி அப்துல்காதர்(50) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1,500 மதிப்புள்ள 227 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: