கிருஷ்ணகிரி அணையில் 667 கனஅடி நீர் திறப்பு

கிருஷ்ணகிரி, டிச.5: பெங்களூரு அருகேயுள்ள நந்திமலை, தென்பெண்ணை ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக 748 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 40.02 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் 1079 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 984 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 667 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.95 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Related Stories: