5 டூவீலர்கள் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

கிருஷ்ணகிரி, டிச.5: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியை சேர்ந்தவர் தேவேந்திரன் (43). கடந்த 2ம் தேதி, தனது டூவீலரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி, தானம்பட்டியை சேர்ந்த கார்ப்பெண்டர் அண்ணாமாலை(26), தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகேசன்(42), தனது டூவீலரை சத்தியசாய்நகர் பகுதியில் நிறுத்தி விட்டு, கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரின் டூவீலர் திருடு போனது.

 இதுகுறித்து புகார்களின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பையனப்பள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன்(24) என்பவர் குந்தாரப்பள்ளி சந்தையில் டூவீலரை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருடுபோயிருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். எலத்தகிரி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்தோணி(68), தனது டூவீலரை மகாராஜாகடை நாரளப்பள்ளி கூட்ரோடு பகுதியில் நிறுத்திவிட்டு கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மகாராஜாகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: