பாப்பாரப்பட்டி, டிச.5: பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகே, கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், நலவாரிய செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கிட்டு(எ) சண்முகம் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விசுவநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜூ, சிபிஎம் பாப்பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் சின்னசாமி, பகுதி நிர்வாகிகள் லோகநாதன், முகிலன், செல்வராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்டுமானப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.