வாகனம் மோதி தொழிலாளி பலி

நல்லம்பள்ளி, டிச.5: அதியமான்கோட்டை அடுத்த புறவடை பகுதியைச் சேர்ந்தவர் காவேரி(55). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சேலத்தை நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட காவிரி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: