×

கடையில் செல்போன் திருடும் மர்ம நபர்

விருத்தாசலம், டிச. 5: விருத்தாசலம்கடலூர் சாலையில் கயிறு மண்டி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் சித்தலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை திறந்துவிட்டு விஜயகுமார் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் கடையில் இருந்த பொருட்களை விலை விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது விஜயகுமார் எதிர்பார்க்காத சமயத்தில் கடையில் இருந்த விஜயக்குமாரின் 14 ஆயிரம் மதிப்பிலான செல்போனை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து அவர் சென்ற சிறிது நேரத்தில் தனது செல்போனை விஜயக்குமார் தேடியுள்ளார். செல்போன் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது அதில் கடைக்கு வந்து அவரை மட்டும் விசாரித்து விட்டு எதுவும் வாங்காமல் திரும்பி சென்ற மர்மநபர் செல்போனை திருடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமார் இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவை கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர். மேலும் அந்த மர்மநபர் செல்போனை திருடிச்செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு