புதுச்சேரி, டிச. 5: புதுச்சேரி கிழக்கு எஸ்பி (பொறுப்பு) ஜிந்தா கோதண்டராமன் தலைமையில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று எஸ்ஐ சிவசங்கரன் தலைமையிலான போலீசார், செஞ்சி சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே வாகன தணிக்கை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் தமிழக பதிவெண் கொண்ட பைக்கில் வேகமாக வந்த ஒருவரை நிறுத்தி, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுனாம்மேடு நடுத்தெருவைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (22) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு பைக் என்பதும் தெரிந்தது.