போலீசாருக்கு கொலைமிரட்டல்

காலாப்பட்டு, டிச. 5: புதுவை அடுத்த தமிழக பகுதியான பெரிய முதலியார்சாவடி மதுவிலக்கு சோதனை சாவடி அருகே கோட்டக்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் மகிபால், போலீசார் சசிக்குமார், மஞ்சுநாதன் ஆகியேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து காலாப்பட்டு நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தியபோது, பைக்கை நிறுத்தாமல் போலீசாரை அசிங்கமாக திட்டிவிட்டு வேகமாக சென்றனர். பின்னர் ஆரோ கடற்கரை அருகே போலீசார் அந்த கும்பலை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர்களிடமும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு அவர்கள் மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓட முயன்றனர்.இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து அதிரடியாக கைது சென்றனர். அவர்கள் 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: