மாற்றுத்திறனாளிகள் தினம்

கடலூர், டிச. 5: கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் சிறப்பு பள்ளி இணைந்து உலக குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் பிறையோன், உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன், மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவில் மாவட்ட கண் காணிப்பாளர் கதிரவன், பள்ளி தாளாளர்கள் குமுதம் கோபால், கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் ஞானமணி, சிவகுருநாதன், வெங்கடேசன், மணிவாசகம், ஆனந்த்ராஜா, வேல்முருகன், ரோட்ராக்ட் சங்க தலைவர் சிலம்பரசன், பொருளாளர் சலீம் மற்றும் குளோபல் சிறப்பு பள்ளி குழந்தைகள் கலந்துக்கொண்டனர். செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

Related Stories: