நெய்வேலி, டிச. 5: வடலூரில் மகளிர் திட்டம் மூலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (5ம்தேதி) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று(5ம்தேதி) வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமில் மகளிர் திட்டம் மூலம் தொழிற்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தொழில் கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் வகையில் நடத்தப்பட உள்ளது.