நாகர்கோவில், டிச.5: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு வாகன பேரணியினை கலெக்டர் அரவிந்த் தொடக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்2022 தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 அன்று அங்கீகரிக்கப்பட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது. 01.01.2022ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான பணி நடைபெற்று வருகிறது.