சாயல்குடி, டிச. 5: முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் நெப்போலியன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அபுபக்கர் சித்திக், முகாமை துவங்கி வைத்தனர். முகாமில் ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தம், சளி, சிறுநீர், இசிசி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. 947 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் கோதண்டம், மருத்துவர்கள் உமா மகேஸ்வரி, பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.