கீழக்கரை, டிச. 5: கீழக்கரை மகான் குத்பு செய்யது முஹம்மது அப்பா ஷஹீது ஒளியில்லா தர்காவின் 847ம் ஆண்டு கந்தூரி விழா இன்று மாலை 5.30 மணியளவில் நிர்வாகிகள் சஹாப்தீன். ஹபீப் முகமது தம்பி. முகம்மது மைதீன் முன்னிலையில் தர்கா வளாகத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து இன்றைய தினத்திலிருந்து 4 நாட்கள் இரவில் மௌலிது (புகழ்பாடி) ஓதப்பட்டு நார்ஸா வழங்கப்படும். தொடர்ந்து டிச.8ம் தேதி இரவு 0 மணி அளவில் மகானின் மக்பராவில் சந்தனம் பூசும் விழா நடைபெறும். ஜன.4ம் தேதி மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கப்படுகிறது. ஜன.5ம் தேதி காலை 6 மணியளவில் நெய் சோறு நார்ஸா வழங்கப்படும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மக்பூல் சுல்தான். முத்துவேல் சித்திக் ஜலாலுதீன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.