திருப்பூர், டிச.5: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 49 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 783 ஆக உள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 605 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், இது வரை மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-மாக உள்ளது.