திருப்பூர், டிச. 5: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ‘சிறப்பு கால்டை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்’ நடத்தும் திட்டம் 2021-2022-ம் நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற் புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. கோழிகளும் இதில் அடங்கும்.