சுற்றுலா பயணிகளை கவரும் பால்சம் மலர் அலங்காரம்

ஊட்டி, டிச. 5: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்களே இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர் அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு கோடை காலங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏதுவாக தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது.

தற்போது விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. பால்சம், பிகோனியோ போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  மலர்களே இல்லாத பூங்காவில், கண்ணாடி மாளிகையில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

Related Stories: