காரில் சென்று இரு சக்கர வாகனங்களை இடித்த நபர்

கோவை, டிச.5: கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மீன் கடை நடத்தி வரும் செல்வம் (38) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.  இந்நிலையில் நேற்று செல்வம் தனது காரில் சென்று ஒரு அபார்ட்மென்ட் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதினார். அப்போது அங்கே இருந்த நபர்கள் அவரை கண்டித்தனர். ஆனாலும் செல்வம் கேட்காமல் திரும்ப பின்னால் சென்று மீண்டும் வாகனங்கள் மீது மோதினார். இதில் 3 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தது. இது தொடர்பான காட்சி அங்கேயிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் செல்வத்தை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: