பைக் மோதி முதியவர் பலி

கோவை, டிச. 5: கோவை நாயக்கன்பாளையம் அடுத்த பண்டிதர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). இவர் ஆனைமலை சிங்காநல்லூர் ரோட்டில் நேற்று முன்தினம் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: