ஈரோடு, டிச.5: பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான எம்.புவியரசன், எம்.ப்ரனேஷ் ஆகியவர்கள் டயனேற்றல் டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்பான “ஐ.ஐ.ஓ.டி 4.0-ரெர்ப்பீ” என்பதை வணிகமயமாக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 26 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவையும், காசோலையையும் டிபிஐ தலைவர் பி.சி.பழனிசாமி, கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் முனைவர்.வீ. பாலுசாமி ஆகியோர் முன்னாள் மாணவர்களிடம் வழங்கினர்.