வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி தயாரிப்பாளர்கள் வேதிப்பொருட்களை சேர்த்து கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை

ஈரோடு, டிச. 5: ஈரோடு மாவட்டத்தில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை தயாரிக்கும் ஆலைகள் வேதிப்பொருட்கள் சேர்த்து கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உருண்டை வெல்லம், நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம், கருப்பட்டி தயாரிக்கும் ஆலைகள், தங்களது வெல்லம் வென்மையாக இருப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட், காஸ்டிக் சோடா மற்றும் இதர வேதிப்பொருட்களான மைதா, ரேஷன் அரிசி மற்றும் அஸ்கா சர்க்கரை ஆகியவை அதிகளவில் கலப்படம் செய்து தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

 கெமிக்கல் கலந்த வெல்லத்தை பொதுமக்கள் சாப்பிடும்ேது வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு  தரமான முறையில் கலப்படமில்லாத வெல்லம், நாட்டுச்சர்கரை மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுடைய தயாரிப்பு மற்றும் இருப்புக் கூடங்களில் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தாத உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு உணவு பாதுகாப்புச்சட்டம் 2006 மற்றும் விதி 2011ன்படி இனி வருங்காலங்களில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்ற தயாரிப்பு ஆலைகளில் கலப்படம் ஏதேனும் கண்டறியப்படுமானால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 பொதுமக்கள் உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 0424-2223545 என்ற எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: