மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திட்டக்குடி, டிச. 4:  ராமநத்தம் அருகே ம.புடையூர் அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கட்டுரை, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை, பேச்சு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தாவுத்அலி வரவேற்றார். மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி, புடையூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் கலைச்செல்வி செல்வராஜ், மங்களூர் ஒன்றிய செயலாளர் சின்னசாமி,  மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலம்பாடி சங்கர், ராஜேந்திரன், சாமிதுரை, கல்லூரி கிளை செயலாளர் அருள், இடைச்செருவாய் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Related Stories: