அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

திருப்பூர், டிச.4:  வெள்ளக்கோவில் நகர, ஒன்றியங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியினர் இருந்து விலகி அதிமுக நிர்வாகிகள் சேகர் (எ) சந்திரசேகர், கோபாலன், தங்கமுத்து ஆகியோர் தலைமையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர், பழவஞ்சிபாளையம் பிரிவில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். வெள்ளக்கோவில் நகர செயலாளர் முத்துக்குமார், வெள்ளக்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்  சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்டக் திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: