கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோவை, டிச.4: கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் பாலக்காடு ரோடு மைல்கல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.  அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் கஞ்சா விற்றது குறிச்சி பிள்ளையார் புரத்தை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: