நாகை, டிச.4: நாகை மாவட்டம் நாகூரில் கனமழையால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நாகூர் வள்ளியம்மை நகர், அமிர்தாநகர், அழகுகாரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல் அம்பேத்கர் நகரில் உள்ள சுனாமி குடியிருப்புகளில் கனமழையால் வீடுகள் சேதமடைந்துள்ளது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார்.