அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாகை, டிச.4: அம்பேத்கர் விருது பெற நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாகை கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது முதல்வர் தலைமையிலான உயர்மட்டக்குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.

இந்த விருது பெற தகுதியுடையோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகள், சாதனைகள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். விருது பெற தகுதியுடைய நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதே அலுவலகத்தில் வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: