நிலையூர் - கம்பிக்குடி கால்வாயிலிருந்து விருதுநகர் கண்மாய்களுக்கு செல்லும் தண்ணீர் அடைப்பு

காரியாபட்டி, டிச. 3: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சுற்றியுள்ள மாங்குளம், ஆவியூர், அரசகுளம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு நிலையூர் - கம்பிக்குடி கால்வாய்த் திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுவதற்கு வைகை அணையிலிருந்து தண்ணீரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான அரசு அதிகாரிகள், கிராமமக்கள் ஒத்துழைப்போடு கால்வாய் தூர்வாரினர். கடந்த 10 நாட்களாக மாங்குளம், ஆவியூர் அரசகுளம், கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மதுரை மாவட்டம், பாரப்பத்தி கிராமத்தைச் சேர்ந்த சிலர், காரியாபட்டி பகுதிக்கு வரும் கால்வாயை மறித்து மணல் சாக்குகளை போட்டு மூடி தண்ணீரை பாரப்பத்தி கண்மாய்க்கு திருப்பி விட்டனர். மேலும் தண்ணீரை விடாமல் மறித்து எதிர்ப்பு தெரிவித்து முப்பதுக்கும் மேற்பட்ட மதுரை மாவட்ட பாரப்பத்தி கிராம மக்கள் கால்வாயை மூடினர். இதுகுறித்த தகவலறிந்த ஆவியூர், அரசகுளம், மாங்குளம் பகுதியில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்ட கால்வாயை திறக்கக் கோரினார். இதனால். இரு மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இருபகுதி மக்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஆர்டிஓ அனிதா, தாசில்தார் சரவணன், காரியாபட்டி தாசில்தார் தனக்குமார், இன்ஸ்பெக்டர் முக்கன் உட்பட அரசு அதிகாரிகள் இரண்டு மா

வட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த கால்வாயை அகற்றி விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும் பாதையை திறந்து தண்ணீரை திருப்பி வைத்தனர். மேலும் இரு மாவட்ட பிரச்னை என்பதால் இரண்டு மாவட்ட கலெக்டர்களும் பேசி முடிவு எடுக்கும் வரை தற்போதைய நிலை தொடரும் என ஆர்டிஓ அனிதா தெரிவித்தார். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க இரு மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: