சிவகங்கை, டிச.3: சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றிய மாநாடு நடந்தது. விடுதலைராஜ் கொடி ஏற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வடிவேலு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் மதி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி பேசினர். ஒன்றிய செயலாளராக உலகநாதன் தேர்வு செய்யப்பட்டார். ஒன்றியக்குழு உறுப்பினர்களாக மதி, வேங்கையா, சுரேஷ், தனசேகரன், செல்லமுத்து, ராமச்சந்திரன், கருப்பையா, வேலம்மாள் தேர்வு செய்யப்பட்டனர்.