செய்யாறு, டிச.3: செய்யாறு பஸ் நிலையத்தில் நேற்று மாலை பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவர்களை 3 பைக்கில் வந்த 6 ரவுடி இளைஞர்கள் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை 5 மணி அளவில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் அவரவர் ஊருக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர் அப்போது 3 பைக்குகளில் வந்த 6 இளைஞர்கள் 2 மாணவர்களை துரத்தித் துரத்தி சரமாரியாக கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது அருகில் இருந்த மாணவர்களும் பொதுமக்களும் அலறி அடித்து ஓடினர். ஒரு சிலர், ரவுடி போல் இருந்த இளைஞர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தபோது பைக்கில் மின்னல் வேகத்தில் இளைஞர்கள் பறந்தனர்.