பிளம்பர் திடீர் சாவு

கிருஷ்ணகிரி, டிச.3: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எர்ரசீகலஅள்ளியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(40). பிளம்பரான இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அடுத்த சீனிவாச காலனியில் உள்ள ஒரு வீட்டில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: