வீட்டில் விபசாரம் புரோக்கர் கைது

தர்மபுரி, டிச.3: தர்மபுரி செந்தில்நகர் பகுதியில், ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெருமாள் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு இருந்த பாலக்கோடு ஜிட்டாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த புரோக்கர் பிரபு (27) என்பவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: