திருப்பூர், டிச.3: திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பனியன் நிறுவன உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூர் முருகம்பாளையம் முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (33). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் அதே பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி கொரோனா விடுமுறை காலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை சரவணன் அத்துமீறி உள்ளார்.