வேதாரண்யம், டிச.3: வேதாரண்யத்தில் மொத்தம் 32 இடங்களில் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களில் மன அழுத்தத்தைப் போக்குவதற்கும், பாடசுமையை குறைப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் இல்லம் தேடி கல்வியை தொடங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தன்னார்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகள் எடுக்க பயிற்சி அளிக்கப்பட்டு நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 32 இடங்களில் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா நடைபெற்றது.