பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கரூர், டிச. 3: கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் அசோக்குமார், கண்ணன், கீதாஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டு, அவசர மற்றும் ஆபத்து நேரங்களில் குழந்தைகள் 1098, 100 போன்ற இலவச எண்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, உடனடியாக தொடர்பு கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம் சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்தந்த பகுதி காவல்நிலைய போலீசாரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Stories: