கரூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

கரூர், டிச. 3: கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. கரூா் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசியினை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் தற்போது (ஓமிக்ரான்) வைரஸ் தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: