கோவை, டிச. 3: கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்து, அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வஉசி உயிரியல் பூங்காவில் அடைத்தனர். கோவை மாவட்டம் சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் புகாரின்பேரில், கால்நடகளை பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் திரியவிட்டால், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை விடப்பட்டது.