கோவை, டிச. 3: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் 2300 குடியிருப்புகளுக்கு உடனடியாக சாக்கடை குழாய் இணைப்பு வழங்க கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார் கோவை ராமநாதபுரம் சிக்னஸ் அருகில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள், கழிவுநீர் பண்ணையின் மூலம் சுந்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துதல் ஆகிய பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜா கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மணியகாரன்பாளையம் முதல் ஒண்டிப்புதூர் வரை 221 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய் அமைக்கும் பணிகளையும், 24x7 குழாய் அமைக்கப்படவுள்ள இடத்தையும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.