பணம் கேட்டு கடத்த முயற்சிப்பதாக திருநங்கை புகார்

ஈரோடு, டிச.3: ஈரோடு பெரியவலசு இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் என்ற செல்வி (40). திருநங்கை.  இவர், சொந்தமாக தறிப்பட்டறை, டிராவல்ஸ், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, ஈரோட்டை சேர்ந்த 4 பேர் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இல்லையென்றால் கடத்தி விடுவதகாவும் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

Related Stories: