65 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

ஈரோடு, டிச.3:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 6ஆயிரத்து 440ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 71 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்காரணமாக, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 954 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 788 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தொற்றால் பாதிக்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த 55 வயது பெண், 71 வயது மூதாட்டி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: