திண்டிவனம், டிச. 2: திண்டிவனத்திலிருந்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு, நொளம்பூர் சாலை வழியாக அண்டப்பட்டு, ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளுக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, செஞ்சி ரோட்டை சேர்ந்த தேவபாலு(55) என்பவர் ஓட்டிச்சென்றார். முன்பக்கத்தில் சுமை தூக்கும் தொழிலாளி வேம்பூண்டியை சேர்ந்த திருமலை(57), உதவியாளரான செஞ்சி ரோட்டை சேர்ந்த கோடீஸ்வரன்(55) ஆகியோரும், பின்பக்கம் மூட்டை மீது பட்டணம் கிராமத்தை சேர்ந்த முருகன் (46), என்பவர் அமர்ந்து சென்றனர். கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் வலது புறமாக லாரியை திருப்ப முயன்றார்.