போளூர், டிச.2: ஜவ்வாதுமலை அருகே அரசு பஸ் மீது மோட்டார் பைக் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஜவ்வாதுமலை தாலுகா குட்டக்கரை கிராமத்தை சேர்ந்த சத்திவேல் (29), அசோக்(25), குமார்(28), ரமேஷ்(32). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பாட்டில்களை வாங்கி கொண்டு ஒரே மோட்டார் பைக்கில் 4 பேரும் ஜமுனாமரத்தூர் நோக்கி சென்றனர். சக்திவேல் பைக்கை ஓட்டி சென்றார். ஆலஞ்சனுர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது ஜமுனாமரத்திலிருந்து போளூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது பைக் மோதியது. பைக்கில் வந்த 4 பேர்களும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.