ஜவ்வாதுமலை அருகே அரசு பஸ் மீது பைக் மோதல் - 4 பேர் படுகாயம்

போளூர், டிச.2: ஜவ்வாதுமலை அருகே அரசு பஸ் மீது மோட்டார் பைக் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஜவ்வாதுமலை தாலுகா குட்டக்கரை கிராமத்தை சேர்ந்த சத்திவேல் (29), அசோக்(25), குமார்(28), ரமேஷ்(32). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பாட்டில்களை வாங்கி கொண்டு ஒரே மோட்டார் பைக்கில் 4 பேரும் ஜமுனாமரத்தூர் நோக்கி சென்றனர். சக்திவேல் பைக்கை ஓட்டி சென்றார். ஆலஞ்சனுர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது ஜமுனாமரத்திலிருந்து போளூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீது பைக் மோதியது. பைக்கில் வந்த 4 பேர்களும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜமனாமரத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து பின்னர் மேல் சிசிச்சைக்ககாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: