காரைக்கால் அரசு கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி

காரைக்கால், டிச.2: உலக எயிட்ஸ் தின நிகழ்ச்சி காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப ஆசிரியர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வீ பெட்ஸ் மேலாளர் புவனேஸ்வரி கலந்து கொண்டார்.

அனைவரும் எயிட்ஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதற்கு தயக்கம் காட்ட கூடாது. ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து மருத்துவ உதவிகளை பெறுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு, நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: