குத்தாலம் பகுதியில் கனமழை பாதித்த இடங்களில் அதிகாரி ஆய்வு

குத்தாலம், டிச.2: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் கனமழையால் பாதித்த பகுதிகள் மற்றும் மழை நீர் தேங்கிய இடங்களில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழைநீர் வடிய வடிகால் வசதி ஏற்படுத்தி கனமழையால் பாதித்த இடங்களில் பொது சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கினார்‌‌. மேலும் சீனிவாசா நகர், மேட்டுத்தெரு, அய்யனார் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார்‌. அப்போது குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: