ரெத்தினம்பிள்ளைபுதூரில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

குளித்தலை, டிச. 2: கரூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை மற்றும் குளித்தலை வட்டார கல்வி அலுவலகம் சார்பாக குளித்தலை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ரெத்தினம்பிள்ளைபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர்கள் குழந்தைகளின் இல்லம் தேடி சென்று கல்வி வழிகாட்டுதல் செய்து பள்ளிக்கு வருவதற்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதன் மூலம் இல்லம் தேடி வரும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களது குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நாடகம், பாட்டு, நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: