கிருஷ்ணராயபுரம், டிச. 2: கிருஷ்ணராயபுரம் அருகே பிள்ளாபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டா மாறுதல் குறித்து சிறப்பு முகாம் கிருஷ்ணராயபுரம் மண்டல துணை தாசில்தார் சவுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் பிள்ளாபாளையம், வல்லம் கொம்பாடிபட்டி வீரகுமரம்பட்டி போன்ற பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் குறித்து 244 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது, மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றனர். இதில் வருவாய் ஆய்வாளர் நசீமா பானு, நில அளவையர் வளர்மதி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பிரபு மற்றும் வருவாய் பணியாளர்கள் உடன் இருந்தனர். க.பரமத்தி: க.பரமத்தி அடுத்த அத்திப்பாளையம் மற்றும் குப்பம் ஆகிய இரு வெவ்வேறு ஊராட்சி பகுதி மக்களுக்கான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் குப்பம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்றது.